சரி, நாமளும் நம்ம பங்குக்கு ஏதாவது போடுவோமேனு சொல்லி, இந்த கடிதம் உங்க பார்வைக்கு.
பாராட்டுறதுக்கு ஒரு மனசு இருக்கணும். அது இந்த என் நண்பன் கிட்ட நிறைய இருக்கு போல - என்னையும் ரொம்பவே பாராட்டியும், சில இடத்துல குட்டியும் இருக்கான். அவனோட நேர்மை எனக்கு பிடிச்சிருந்தது.
என்ன தான் அவனோட நல்ல மனசை உங்களுக்கு காட்டத்தான் நான் இதை பதிவேற்றம் பண்ணேனு மாரியம்மா முன்னாடி கற்பூரம் அணைச்சி சத்தியம் பண்ணாலும், இது நான் எனக்கே செஞ்சிக்கிற சுய விளம்பரங்கிறத நீங்க கண்டுபிடிக்க மாட்டீங்களா என்ன!!

வருத்தங்களும் வீண் கவலைகளும் மனதை அலைகழிக்கும் நாட்களில் உனது கடிதம் மென்மையான மயிலிறகால் வருடும் சுகானுபவத்தைத் தருகின்றது!!
எந்த விருதோ, வெற்றியோ, சாதனையோ பெற்றுத் தராத உன்னத அனுபவத்தை தருகின்றன உனது வார்த்தைகள்!!
கடிதத்தின் வார்த்தைகளுக்கும் உன் மனதின் எண்ண ஓட்டங்களுக்கும் எந்த முரண்பாடுகளையும் யாராலும் கண்டிட இயலாது!!
அப்படிப்பட்ட தூய்மையான, கள்ளங்கபடமற்ற மனதையே, அன்பையே, நட்பையே இன்றளவும் சுமந்துக் கொண்டிருக்கிறாய். அவ்வாறாகவே நானும் இருக்க வேண்டுமென்பதே எனது லட்சியமும்!!
நீ இதை என்று, எப்பொழுது படிப்பாய் என எனக்கு தெரியாது. இருந்தாலும் என்னால் உனக்கும் நம் நட்புக்கும் செய்ய முடிந்த சின்ன மரியாதையே இது!!
நன்றிகள் பல கண்ணனுக்கு,
நட்பிற்கு வீற்றிருக்கை யாதென கண்டு சொன்னவனுக்கு!!
1 comment:
Romba LENGTH-aa irukke....!!! Good ONE !!
Post a Comment