முன்னெச்சரிக்கை: இது கவிதை அல்ல. ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்ட வார்த்தைகளாலான எண்ணங்களின் குவியல்.அல்லது டரியல் எனவும் வைத்துக்கொள்ளலாம். :)
என்னுடைய
புதிய நட்பை
உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்
அது
பொய் சொல்வதில்லை
போலியாய் சிரிப்பதில்லை
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவதில்லை
அது
முதுகுக்குப் பின்னால்
புகைவதில்லை
முகத்திற்கு முன்னாலேயே
தயக்கமின்றி
புகைகின்றது
அது
கசடைத்
தன்னுள்ளே கொண்டிருந்தாலும்
வெள்ளுடுத்தியிருப்பது
பலரையும்
பரிகசிப்பதாகவே படுகிறது
அது
விக்ரமன் படநாயகிகளைப் போல்
அறிவரை கூறுவதில்லை
விஜய் படநாயகிகளைப் போல்
சொல்வதை மட்டுமே செய்கிறது
அது
உதட்டோடு முத்தமிட்டாலும்
நுரையீரலின்
தரையிலே நடனமாடுகிறது
அடிவயிறுவரை சில்லிட வைக்கிறது
அது
ஆள்காட்டி விரலளவே இருந்தாலும்
ஆள் காட்டி விளையாடுவதில்லை
அதனுடனான
எனது நட்பை
முறித்துக்கொண்ட பின்னும்
அது
என்னையோ நட்பையோ
தூற்றுவதில்லை
அது
அதுவாக
இருப்பதனால் தான்
அதுவாகவே இருக்கிறது போல
அவனாகவோ அவளாகவோ
இருந்திருந்தால்
நிறம் தரம் மணம்
நிரந்தர குணம் இல்லையெனப்
புரிந்திட செய்திருக்கும்
No comments:
Post a Comment