Tuesday, November 16, 2010
இரவுகள் தனியாக வருவதில்லை
சில சமயங்களில்
இனிமையைக் கொண்டு வருகின்றன
பல சமயங்களில்
தனிமையைக் கொண்டு வருகின்றன
சில சமயங்களில்
இசையைக் கொண்டு வருகின்றன
பல சமயங்களில்
இயலாமையைக் கொண்டு வருகின்றன
சில சமயங்களில்
நினைக்க மறப்பதைக் கொண்டு வருகின்றன
பல சமயங்களில்
மறக்க நினைப்பதைக் கொண்டு வருகின்றன
சில சமயங்களில்
பேரின்பத்தைக் கொண்டு வருகின்றன
பல சமயங்களில்
பேரலறலைக் கொண்டு வருகின்றன
பெரும்பாலும்
இரவுகள் தனியாக வருவதில்லை
இரவுகள்
கொடுங்கனவுகளின்
கூடாரங்களாகவே இருக்கின்றன
இரவுகள்
இயலாமையின் வேதனையைக்
கூட்டுபவையாகவே இருக்கின்றன
இரவுகள்
பகல்களின் வேஷத்தைக்
கேலி செய்பவையாகவே இருக்கின்றன
இரவுகள்
பகல்களின் சந்தோஷங்களைக்
கேள்விக்குட்படுத்துபவையாகவே இருக்கின்றன
இரவுகள்
பகல்களின் எதிரிகளாகவே இருக்கின்றன
ஆம்
இரவுகள் தனியாக வருவதில்லை தான்
ஆனால்
தூக்கத்தை மட்டும் கொண்டு வருவதே இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இனிமை!!! அருமை!!!
really great
Post a Comment