Friday, November 26, 2010

நானா?!



எனக்கு முன்னே
ஆயிரம் திரைகள்
அத்தனையும்
கிழித்தெறிந்தாலும்
முகமூடியோடே
உலகத்தோடு
உறவாடுகிறேன்

விடையறிந்த
வினாக்களையே
மீண்டும் மீண்டும்
கேட்கிறேன்
தண்ணீரைக்
கையில் வைத்துக்கொண்டே
தாகத்தோடு
அலைகிறேன்

நீ சொல்வது
உண்மையென தெரிந்தும்
ஏற்றுக்கொள்ள முடியாததால்
குற்றமென நிறுவிடவே முயல்கிறேன்
என் முதுகில்
(ஏன் அவ்வளவு தூரம் செல்ல வேண்டும்)
என் முகத்திலேயே(முகமூடியிலேயே)
அலங்கரிக்கப்பட்ட அழுக்குகள்
ஆயிரம் இருந்தாலும்

கனவுகளிலும்
என் முகம் தேடி
தொலைகிறேன்
கண்ணாடியில்
தெரிவதையே
என் முகம் என
தேற்றிக்கொள்கிறேன்



Photo courtesy: http://www.betterphoto.com/gallery/dynoGallDetail.asp?photoID=5695190&catID=23076&contestCatID=10&rowNumber=3&camID=

2 comments:

Rainbows ahead said...

venkat.. unmaiyai sollu.. yaarintha penn?

SAKTHI said...

Unakkula oru vairamuthu oru karuvaachi kaaviyam eluthittu irukkaru...sooper :)

Post a Comment