Monday, November 15, 2010

அவன் அமைதியாகவே இருந்தான்



அவன் அமைதியாகவே இருந்தான்

வார்த்தைகளின்
தேவை இல்லாத பொழுது
அவன் அமைதியாக இருந்தான்

வார்த்தைகளால்
தேவைகளை உணர்த்த முடியாத பொழுது
அவன் அமைதியாக இருந்தான்

வார்த்தைகள்
புரிந்துக்கொள்ளப் படாத பொழுது
அவன் அமைதியாக இருந்தான்

வார்த்தைகள்
தங்கள் அர்த்தங்களை இழந்த பொழுது
அவன் அமைதியாக இருந்தான்

வார்த்தைகள்
அவனுக்கு அன்னியமாகப் போன பொழுது
அவன் அமைதியாக இருந்தான்

வார்த்தைகளோடு
அவனுக்கு முரண்பாடு ஏற்பட்ட பொழுது
அவன் அமைதியாக இருந்தான்

வார்த்தைகளால்
தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட பொழுது
அவன் அமைதியாக இருந்தான்

வார்த்தைகளால்
வார்த்தைகளை வெற்றிகொள்ள முடியாத பொழுது
அவன் அமைதியாக இருந்தான்

வார்த்தைகளோடு
வாக்குவாதம் ஏற்பட்ட பொழுது
அவன் அமைதியாக இருந்தான்

வார்த்தைகளால்
கண்ணீரைத் தெரிவிக்க முடியாத பொழுது
அவன் அமைதியாக இருந்தான்

வார்த்தைகளால்
எதையும் முழுமையாக புரிய வைத்துவிட முடியாதென உணர்ந்த பிறகு
அவன் அமைதியாகவே இருந்தான்

4 comments:

Tamizhan said...

அருமை..அமைதிக்கு இத்தனை அர்த்தங்களா? இதில் எந்த வகை உன் அமைதி..

jeevabala said...

நீங்களே கண்டுபிடியுங்களேன்.. :)

Unknown said...

gud one :) silence is the best response.

~tony~ said...

nice poem venkat..like the subtle meaning of each stance..!!..keep it coming..!

Post a Comment