விடுதலை வேள்விதனை தடுக்கும் தறுதலை
எடு தலை அது எவன் தலையாயினும்!!
விழுதலை தோல்வியென நினையோம் வீறுகொண்டு
எழு தலை முளைக்கும் வீழ்ந்த இடத்தில்!!
மடிதலை மகிழ்ச்சியோடு ஏற்போம் அன்றி உமக்கு
படிதலை உம் கனவிலும் செய்யோம்!!
அழுதலையே விரும்பாத எம் பெண்டிர் - உம் காலை
தொழுதலையே தொழில்செய் மூடர் மூச்சறுப்பர்!
[Image downloaded from the internet]